Sunday, October 25, 2015

பாரதக் கலாச்சாரம், பண்பாடு என்ற வீண் வாதம் ....

முகநூல்:
தோழி சுலேகா
பாரதக் கலாச்சாரம், பண்பாடு என்று இங்கு வீண் வாதம் செய்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்...
கலாச்சாரத்திர்கும் காவித்துவத்ததிற்கும் இங்க என்ன வித்தியாசம் உள்ளது ?
இங்கு நான் சொல்லும் குற்றங்கள் அனைத்தும் அதன் (காவி) பின்னணியில் தான் நிகழ்கிறது. பாலியல் வக்கிரங்களும், சிறுபிள்ளைகளின் மேல் வண்புணர்வுகளும் இங்கு தானே நடக்கிறது. இதுவும் உன் கலாச்சாரம் தானே..
எல்லையில் வாழும் இஸ்லாம் பெண்கள் என்றாலும் சரி, ஊர்க் கொல்லையில் வாழும் தலித் பெண்கள் என்றாலும் சரி.. காலங்காலமாக உங்கள் இராணுவத்தாலும், சாதித் திமிர் காமுகத்தாலும்தானே சீரழிந்துக கொண்டிருக்கிரார்கள். அதுவும் உன் கலாச்சாரப் பின்புலம் தானே..
இதற்கு முன்பு  எந்தப் பெண்ணும் வாய்திறக்கவில்லை, இப்போது கொஞ்சம் வாய்திறந்து வெளியில் சொல்கிறார்கள். அதையும் பொருக்காமல் வண்புணர்வு செய்து மரத்தில் தூக்கிலேற்றும் இந்தச் சமூகத்தில் இதுவும் ஒரு கலாச்சாரம் தானே..
கலாச்சாரம் என்று சொல்லி இங்கு எதை பேசி ஏய்க்கப் பார்க்கிறாய்?
பெற்ற பிள்ளையைக் கூட வண்புணர்வு செய்யும் போக்கு உன் கலாச்சாரப் பின்புலம் இல்லையா ?
எங்கிருந்து வந்தது இந்தக் காமவெறி பிடிச்ச கலாச்சாரம். உன் மதக் கோட்பாடு என்று ஒத்துக்கொள்கிறாயா?
இல்லை விளக்கம் நான் கொடுக்கவா ?
தந்தை மகள் உறவைக் கூட கொச்சைப் படுத்திக் காட்டிய மதம் உன் மதம் அல்லவா ? அதை ஏற்றுக்கொண்ட உங்கள் கலாச்சாரம் இப்படித்தானே வக்கிரம் படிந்து கிடக்கும்...
பிரம்மன் தன் மகள் சரஸ்வதியுடன் உறவு கொண்டதாக ஸ்ரீமாதா பாகவதம் 3ஆவது காண்டம் 12 ஆவது அத்தியாயத்தில் கூறப்படுகின்றது.
வக்கிரங்கள் சொந்த மகளையும் விட்டுவிடுவதில்லை என்பதை அண்மைய ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.
வரைமுறையற்ற பாலியல் நிலவிய சமூகத்தில் இருந்து வளர்ச்சி பெற்று ஆணாதிக்க அமைப்பு உருவான பின்பு, மகளைத் தந்தை உறவு கொள்வது என்பது வக்கரித்துப்போன சமூக நிகழ்வாகும்.
சொந்தக் குழந்தைகளைப் பலியிடப்படுவது என்பது இங்கு சர்வ சாதாரணமாக நிகழ்கின்றது.
இந்து மதம் இதைத் தனது புராண இதிகாசங்கள் மூலமாக நியாயப்படுத்தி ஊக்குவிக்கின்றது.
எது உனது கலாச்சாரம்?
அதன் பின்புலம் என்ன ?
இதை முதலில் தெரிந்துகொண்டு என் பதிவில் கருத்துகளை தெரிவி...
- தோழி. சுலேகா
 

No comments: