Sunday, October 25, 2015

நீ ஒரு பெண் என்பதால் ......

முகநூல்:
தோழி சுலேகா
என் முகநூலின் வட்டாரத்தில் சிலர் சொல்லுகிரார்கள்..
நீ விளம்பரம் தேடுகிறாய், நீ ஒரு பெண் என்பதால் உனக்கு like comment விழுகிறது என்று..
முகநூலை தவறாக நான் ஒரு போதும் பயன்படுத்தியதில்லை, அந்த அளவுக்கு எனக்கு அறிவில்லாமலும் இல்லை இந்த முகநூல் இல்லை என்றால் என் பேனா மை தீர்ந்து விடாது..
ஒரு பெண் போஸ்ட் போட்டால் ஜொல்லு விடு ஆண்களால் like விழுவது இந்த முகநூலில் சகஜமே..
என்னிடம் இந்த மாதிரியா பேசும் ஆண்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்..
பெண்கள் போஸ்ட் போட்டால் like விழும் ஆனால் எந்த ஆணும் அந்த பெண்ணின் போஸ்ட்டை share செய்வதில்லை... எனக்கு இங்கு ஒவ்வொரு போஸ்ட்க்கும் சராசரியா 60 பேர் share செய்கிறார்கள்.. பெண்கள விட ஆண்களே அதிகம் share செய்கிறார்கள்..
இங்கு பெண், ஆண் என்று பார்க்கப்படுவது இல்லை அறிவை மட்டும் தான் அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள்..
புரிந்துகொள்ளுபவர்களுக்காக...



பெண்ணியம் என்பது எளிதாக பேசிவிட முடியாது.. அதுவும் தராசு போல் பேசுவது என்பது கடினம்..
ஆகவே நான் பெண்விடுதலையை கீழ் நிலை பெண்களின் பார்வையிலிருந்து பேசுகிரேன்..
என் கருத்தை சிலர் ஏற்றுக்கொள்ளலாம் அல்லது சிலர் விமர்சனம் செய்யலாம் ஆனால் உண்மை என்பது என் பதிவில் இருந்துகொண்டே இருக்கும்..

No comments: